Monday, October 24, 2011

வெற்றிக்கு உதவும் (புது) திருக்குறள்

01. படிப்பின்கண் பிடிப்பினையும் பணியின்கண் துடிப்பினையும்

கெடுக்கும் காரியமாம் காதல்.

02. போற்றற்குரிய ஆற்றலை ஆற்றி தோற்றாலும் பிறர்

தூற்றிட ஆற்றாதே ஆற்றல்.

03. முடியும் என்பதையே மூச்சாய் கொண்டவரை

கண்டாலே தொடைநடுங்கும் தோல்வி.

04. நின்று நிலைப்பதே புகழ் யார்க்கும்

சென்று வருவது செல்வம்.

05. சோதனை இல்லாது சாதனை வாய்க்காது

வேதனை இல்லாது வரமேது.

06. ஒன்றி முனையாத செயல் முடியாது

வென்றிட வேண்டும் விடாமுயற்சி.....

No comments:

Post a Comment