Tuesday, October 25, 2011

வெற்றி, தோல்விக்கான காரணங்களை கண்டறிந்தால்....

ஒன்றிலேயே குறி

எந்த ஒரு செயலைச் செய்தாலும் அதை முழுமையாகச் செய்ய வேண்டும். அதிலேயே கண்ணும் கருத்துமாக இருக்க வேண்டும். நோக்கம் எல்லாம் அதிலேயே இருக்க வேண்டும்.

24 மணி நேரமும் அந்தச் செயலைப் பற்றிய எண்ணம் மனதில் இருந்து கொண்டே இருக்க வேண்டும். இது போன்ற காரியங்களில் முன்னரே வெற்றிகொண்டவர்களின் முயற்சியைக் கணக்கிட்டுப் பார்த்தால் வெற்றி பெற்றவர்கள் எல்லாம் எத்தகைய கடுமையான முயற்சியில் ஈடுபட்டார்கள் என்பது தெரியும்.நாம் செய்யும் முயற்சியின் அளவு எத்தகையது என்பதையும் கணக்கிட்டு நமது முயற்சியை அவ்வப்போது அதிகப்படுத்திக் கொள்ளலாம்.

தொடர்ந்த முயற்சி

பலரின் தோல்விக்கு தொடர்ந்த முயற்சியின்மை முதன்மையான காரணம் என்பதை எண்ணிப் பார்த்து அறிந்து கொள்ளலாம். தொடக்கத்தில் மட்டும் முயற்சிஎடுத்துக் கொண்டு, தொடர்ந்து முயற்சி செய்யாமலேயே தோல்வி கண்டவர்களே பலராவர்.

No comments:

Post a Comment