Sunday, November 20, 2011

சுறுசுறுப்பு வேணுமா

கற்றல் என்பது மூளை சம்பந்தப்பட்ட வேலை. படிக்கும் காலத்தில் மூளையை சுறுசுறுன்னு வைத்து கொண்டிருந்தால், உங்களை எந்த காலத்திலும் யாராலும் ஜெயிக்க முடியாது. எந்த விஷயமும் மறக்காது. நிறைய சுவையான விஷயங்கள் பேசுவதால், ஏராளமான நண்பர்கள் கிடைப்பர். உங்களுக்கு தெரியாத விஷயமே கிடையாது என்னும் வகையில் பெயர் வாங்குவீர்கள். மூளை சுறுசுறுன்னு இருந்தா ஏராளமான அறிவு செல்வங்களை அது கொண்டு வந்து சேர்க்கும். மூளை சுறுசுறுப்பாக இருப்பதற்கு இதோ சில வழிகள்:

வழி1: தினமும் மூளைக்கு வேலை கொடுங்கள். புதிர், கணக்கு, குறுக்கெழுத்து, போன்ற எளிய விளையாட்டுகளை விளையாடுங்கள்.
வழி2: தினமும் படிங்க. படிக்கிறது நிறைய புதுத் தகவல்களை தரும்.
வழி3: மூளையின் வலது அரைக்கோளப் பகுதியைப் பலப்படுத்துகிற சமாசாரம் இசையில் இருக்கு. நல்ல இசையை கேட்பது உணர்வு பூர்வமான அறிவாளியாக உங்களை உருமாற்றும்.
வழி4: தினமும் 10 முதல் 15 நிமிடங்களுக்கு தனியே அமர்ந்து உள்ளுக்குள் ஆழமா மூச்சை இழுத்து விடுங்க. மூளைக்கு உடனடியாக ஆக்சிஜன் பாய்ஞ்சு சடார்னு அது முழிச்சுக்கும். உங்க உடம்பு விழிப்புணர்வோட உஷாரா செயல்பட ஆரம்பிக்கும்.
வழி5: நல்ல சுகமா தூங்குங்க. தூக்கம் மூளைக்கு ஓய்வு கொடுத்து புத்துணர்ச்சி பெற வைக்கிறது. எட்டு மணி நேரம் போதும். "கும்பகர்ண பட்டம்' வேண்டாம் சரியா!
வழி6: நிறைய காற்கறிகளை சாப்பிடுங்க. முடிஞ்சா பச்சையாக சாப்பிடுங்க.

Sunday, November 13, 2011

சர்வ காரிய சித்தி தரும் - மந்திரங்கள், ஸ்தோத்திரங்கள் , ஸ்லோகங்கள் Read more: http://www.livingextra.com/2011/08/blog-post_08.html#ixzz1db5Me46G


எடுத்த காரியங்கள் யாவினும் தடையின்றி வெற்றி பெற

சுக்லாம் பரதரம் விஷ்ணும் சசிவர்ணம் சதுர்ப்புஜம்
ப்ரசன்ன வதனம் த்யாயேத் சர்வ விக்நோப சாந்தயே
கஜானனம் பூத கணாதி ஸேவிதம்
கபித்த ஜம்பூ பலஸார பக்ஷ?தம்
உமாஸுதம் சோக வினாச காரணம்
நமாமி விக்னேஸ்வர பாத பங்கஜம்

Read more: http://www.livingextra.com/2011/08/blog-post_08.html#ixzz1db5ojhcd

சகல காரிய சித்திக்கான எளிய முறை:

செய்யும் காரியங்களில் தடைகள் விலக
மஹா கணபதிர் புத்தி ப்ரிய: ஷிப்ர ப்ரஸாதத ந
ருத்ர ப்ரியோ கணாத்யக்ஷ உமாபுத்ரோஸ்க நாஸந;

இதை தினமும் 10 முறை சொன்னால் இடையூறின்றி காரியங்கள் நிறைவேறும்.

Read more: http://www.livingextra.com/2011/08/blog-post_08.html#ixzz1db68EMt9

நினைத்த காரியம் நிறைவேற
இந்த ஸ்லோகத்தை தினமும் இரவில் உறங்குவதற்கு முன் பதினோரு தடவை பாராயணம் செய்து வர நினைத்த காரியம் எதுவாகினும் நிறைவேறும்.
சிந்தாமணி: ஸுரகுரு: த்யேயோ நீராஜநப்ரிய:
கோவிந்தோ ராஜராஜேரா பஹு புஷ்பார்ச்ச நப்ரிய:

Read more: http://www.livingextra.com/2011/08/blog-post_08.html#ixzz1db6Z8iFj

நினைத்ததெல்லாம் நிறைவேற
ஸமாநா ஸாமதேவீ ச ஸமஸ்த ஸுரஸேவிதா
ஸர்வ ஸம்பத்தி ஜநநீ ஸத்குணா ஸகலேஷ்டதா
இந்தச் சுலோகத்தை காலையில் 18 முறை கூறி வருபவர்களுக்கு சகல காரியங்களிலும் வெற்றி உண்டாகும்.

Read more: http://www.livingextra.com/2011/08/blog-post_08.html#ixzz1db6iwhLz

எல்லா காரியங்களிலும் வெற்றிபெற
ஸர்வார்த்த ஸித்திதோ த தா விதாதா விஸ்வ பாலக
விருபா÷ஷா மஹா வக்ஷõ: வரிஷ்டோ மாதவ ப்ரிய:

Read more: http://www.livingextra.com/2011/08/blog-post_08.html#ixzz1db71Etsm

உற்சாகம் ஏற்பட
வேத்யோ வைத்யஸ்: ஸதாயோகீ வீரஹா மாதவோ மது:
அதீந்த்ரியோ மஹாமாயோ மஹோத்ஸாஹோ மஹாபல:

Read more: http://www.livingextra.com/2011/08/blog-post_08.html#ixzz1db75G6Q5

முயற்சிகளில் வெற்றி கிடைக்க
நமோஸ்து ராமாய ஸலக்ஷ?மணாய
தேவ்யை ச தஸ்யை ஜனகாத்ம ஜாயை
நமோஸ்து ருத்ரேந்த்ரய மாநிலேப்ய;
நமோஸ்து சந்த்ரார்க்க மருத்கணேப்ய.

Read more: http://www.livingextra.com/2011/08/blog-post_08.html#ixzz1db7CyGQN

உடல், மன வலிமைகள் கிடைக்க
சிவ: சக்த்யா யுக்தா: யதிபவதிசக்த; ப்ரபவிதும்
நசேத் ஏவம் தேவ; நகலு குலச; ஸ்பந்திதுமபி
அதஸ்த்வாம் ஆராத்யாம் ஹரிஹர விரிஞ்சாத பிரபி
ப்ரணந்தும் ஸ்தோதும் வாகதம் அக்ருத புண்ய ப்ரபவதி

Read more: http://www.livingextra.com/2011/08/blog-post_08.html#ixzz1db7IkKc5

நினைத்த காரியங்கள் நிறைவேற
ஜயா சவிஜயா சைவ ஜயந்தீ சாபராஜிதா
குப்ஜிகா காளிகா ஸாஸ்த்ரீ
வீணா புஸ்தக தாரிணீ

இச்சுலோகத்தை தினமும் பத்து முறை கூறி வழிபட்டு விட்டு எக்காரியத்தில் ஈடுபட்டாலும் வெற்றி பெறலாம். சம்சார சாகரத்திலிருந்து விடுபட ஞான யோகி ஆதிசங்கரர் சிவநாமா வல்யஷ்டகம் எனும் சுலோகங்களை அருளியுள்ளார்.
இச்சுலோகங்கள் ஒவ்வொன்றிலும் மாந்திரீக வலிமையுள்ள சொற்கள் அடங்கியுள்ளன.

இச்சுலோகங்களை வீட்டில் சிவபூஜை செய்தோ, சிவபெருமான் சன்னதியிலோ பாராயணம் செய்யலாம். தினந்தோறும் மூன்று முறை வீதம் 108 நாட்கள் இச்சுலோகங்களைப் பாராயணம் செய்தால் குடும்பப் பிரச்சனைகள் நீங்கும். சம்சார சாகரத்திலிருந்து நிம்மதியான வாழ்வு பெறும் மந்திர வலிமை இச்சுலோகங்களுக்கு உண்டு என ஆதிசங்கரர் அவர்கள் குறிப்பிட்டுள்ளார்கள்.

Read more: http://www.livingextra.com/2011/08/blog-post_08.html#ixzz1db7bz7BP

உங்கள் தோல்வி துவண்டு போக அல்ல..

நமக்கு ஒரு கதவு மூடப்பட்டால், நம்மருகே மற்றொரு கதவு திறந்திருக்கிறது என்று அர்த்தம். ஆனால், பலரும், மூடியே கதவருகே அமர்ந்து அழத்தான் செய்கிறார்களேத் தவிர, திறந்திருக்கும் கதவை கவனிப்பதே இல்லை.

ஒரு தோல்வி தந்த அனுபவத்தைக் கொண்டு, நமது வாழ்க்கையை இன்னும் எவ்வாறு சிறப்பாக மாற்றி அமைத்துக் கொள்ள வேண்டும் என்று சிந்திக்க வேண்டும். நாம் அதிகம் விரும்பும் ஒன்றை நாம் இழப்பதற்குக் காரணம், நம்மை அதிகம் விரும்பும் ஒன்று நமக்காக காத்திருக்கிறது என்பதால்தான்.

தோல்வி அடையும் போது துவண்டு விடாமல், நமக்கிருக்கும் திறமை மீது நம்பிக்கை வைத்து, மற்றொரு நல்ல வழியை பின்பற்றி, லட்சியத்தை அடைய முயற்சியுங்கள். தோல்விதான் நமக்கிருக்கும் திறனை வெளிப்படுத்தும் கருவி என்பதை உணருங்கள். நீங்கள் விரும்பியதே கிடைத்துவிட்டால், உங்கள் மனத் திடம் வெளிப்படாது. உங்கள் மீதான நம்பிக்கை பயனற்றுப் போகும்.

உங்களைப் பற்றி உங்கள் தோல்வியில்தான் நீங்கள் முழுமையாக அறிய முடியும். தோல்வி என்பது வெற்றியின் முதற்படி என்ற பழமொழி பொய்யல்ல. ஒரு வெற்றியை பெற்றவர்கள், அந்த படிகட்டிலேயே அமர்ந்துவிடுவார்கள். தோல்வியினால், அடுத்தடுத்த படிகட்டுகளை அடைந்து உச்சத்தை எட்டுபவர்கள்தான் அதிகமாக ஜெயிக்கிறார்கள்.

எந்த தோல்வியும், நிரந்தரமல்ல. ஒரு கதவு மூடினால், அதனருகில் இருக்கும் மற்றொரு கதவை பலம் கொண்டு திறவுங்கள். நீங்கள் பயணிக்கும் பாதை லட்சியத்தை எட்டுவதாக இருக்கும்.
தோல்வியைக் கண்டு துவளாதீர்கள்.

வெற்றிக்கு..

ஆகாய உச்சிதான் என் லட்சியம் – டாக்டர்.ஏ.பி.ஜே. அப்துல்கலாம்

நான் பிறந்தேன் அரும்பெரும் சக்தியுடன்!

நான் பிறந்தேன் நற்பண்புகளுடன்;
நான் பிறந்தேன் கனவுடன் ;
வளர்ந்தேன் நல்ல எண்ணங்களுடன்
நான் பிறந்தேன் உயர் எண்ணங்களை செயல்படுத்த
நான் பிறந்தேன் ஆராய்ச்சி உள்ளத்துடன்
நான் பிறந்தேன் ஆகாயத்தின் உச்சியில் பறக்க
நான் பூமியில் ஒருபோதும் தவழ மாட்டேன்
தவழவே மாட்டேன்.
ஆகாய உச்சிதான் என் லட்சியம்.
என்ற தன்னம்பிக்கை ...........

அறிவார்ந்த முயற்சியால் ஆகாததில்லை!

எண்ணங்கள் பிரம்மாக்கள்

எல்லா செயல்களுக்கும், நிகழ்ச்சிகளுக்கும் மூல விதை எண்ணங்களே. எண்ணங்கள் இல்லாமல் செயல்கள் இல்லை. நிகழ்ச்சிகள் இல்லை. நம்மைச் சுற்றி இருக்கும் ஒவ்வொரு பொருளும் யாரோ ஒருவர் எண்ணத்தில் கருவாகி பின்னால் உருவாகியது தான். ஒவ்வொருவரின் வெற்றிக்கும், தோல்விக்கும் அவரவர் எண்ணங்களே மிக முக்கிய காரணங்களாக இருக்கின்றன.

இதைப் பெரும்பாலோருக்கு ஏற்க கடினமாக..................

வெற்றியில் ஏமாந்து விடாதீர்கள்!

தோல்வியில் துவண்டு விடாதீர்கள், தன்னம்பிக்கை இழந்து விடாதீர்கள், முயற்சியை நிறுத்தி விடாதீர்கள் என்று எல்லாம் பலர் அறிவுரை சொல்லக் கேட்டிருக்கிறோம். ஆனால் வெற்றி பெற்றவர்களுக்கு யாரும் அதிகம் அறிவுரை சொல்வதில்லை. காரணம் வெற்றி பெற்றவர்கள் அறிவு மிக்கவர்கள், நல்ல உழைப்பாளிகள், எல்லாம் தெரிந்தவர்கள் என்ற அபிப்பிராயம் பலர் மனதிலும் இருப்பது தான். அதெல்லாம் மற்றவர்கள் மனதில் இருந்தால் பரவாயில்லை. வெற்றி பெற்றவர்கள் மனதிலேயே அந்த அபிப்பிராயம் உறுதியாகத் தோன்றும் போது அது எதிர்கால ஆபத்திற்கு அஸ்திவாரம் போடுகிறது.

வெற்றி எப்பேர்ப்பட்ட..............

அறிவைப் பெருக்கும் தோப்புக்கரணம்


ஒரு காலத்தில் தோப்புக்கரணம் போடுவது என்பது பள்ளிகளில் மிகச் சாதாரணமான விஷயம். தவறு செய்தாலோ, வீட்டுப்பாடம் எழுதி வரா விட்டாலோ ஆசிரியர்கள் மாணவர்களைத் தோப்புக்கரணம் போட வைப்பது வாடிக்கை. பரிட்சை சமயத்தில் பக்தி அதிகரித்து மாணவர்கள் அதிக மதிப்பெண் பெற தாங்களாகவே பிள்ளையார் முன் தோப்புக்கரணம் போடுவதுமுண்டு. ஆனால் இக்காலத்தில் தோப்புக்கரணம் போடுவதை அதிகமாக நாம் காண முடிவதில்லை.

ஆனால் இந்த தோப்புக்கரணம் அமெரிக்காவில் ஆராய்ச்சிக்கு எடுத்துக் கொள்ளப்பட்டுள்ளது என்று சொன்னால் ஆச்சரியமாக இருக்கிறதல்லவா? லாஸ் ஏஞ்சல்ஸைச் சேர்ந்த மருத்துவர் எரிக் ராபின்ஸ் (Dr.Eric Robins) இந்த எளிய உடற்பயிற்சியால் மூளையின் செல்களும் நியூரான்களும் சக்தி பெறுகின்றன என்கிறார். அவர் தன்னிடம் வரும் நோயாளிகளுக்கு அந்த உடற்பயிற்சியை சிபாரிசு செய்வதாகக் கூறுகிறார். பரிட்சைகளில் மிகக் குறைந்த மதிப்பெண்கள் எடுக்கும் ஒரு பள்ளி மாணவன் தோப்புக்கரண உடற்பயிற்சியைச் சில நாட்கள் தொடர்ந்து ...........

"தன் திறமைகளை பயன்படுத்திக்கொள்ள தெரிந்தவன் அறிவாளி "

வெற்றிகரமான எல்லா மனிதர்களுக்கும் பொதுவாகவுள்ள அடிப்படையான அத்தியாவசியமான குணம் தன்னால் வெற்றி பெற முடியும் என்ற நம்பிக்கையே .....

ஏனோ தானோ என்றோ அல்லது எப்போதோ மட்டும் தோன்றும் நம்பிக்கையை வைத்து உங்கள் குறிக்கோளை அடையவே முடியாது .

பொறுமை மிக மிக அவசியம் !

மீன் பிடிக்க செல்கிறவர்கள் , பெரிய மீனாய் வேண்டுமென்றால் , இரையை முள் கொக்கியில் கோர்த்துவிட்டு கரையில் பொறுமையாகத்தான் காத்திருக்க வேண்டும் .

எழுதும்பொழுதும் , திரும்ப திரும்பப் படிக்கும்பொழுதும் உங்கள் எண்ணங்கள் தெளிவடைகின்றன. அப்பொழுது உங்கள் லட்சியத்தை அடையும் வழிகள் உங்களுக்கு தெளிவாகத் தெரிகின்றன.

நீங்கள் விழிப்புணர்வுடன் ஆர்வத்தோடு இருக்கும் பொழுது ஒவ்வொரு நாளும் இலட்சியத்தை நெருங்க முடியும் .

எந்தத் தடையையும் , எதிர்மறை உணர்ச்சிகளையும் உங்களை நெருங்க விடாதீர்கள் .

சிந்தனைகளை சிதற விடாதீர்கள் .

நாம் நன்றாக இருக்கும் வரை நம் மனம் சரியான திசையில் சரியான சந்தர்ப்பத்தில் செயல்பட்டு மிகப்பெரிய வெற்றியை ஏற்படுத்திக்கொடுக்கும்.

நீங்கள் செய்யப்போவதென்ன ?

ஒரு வெற்றியாளராக வேண்டும் என்றால் எந்தத் துறையானாலும் ,அத்துறையில் வெற்றி பெற்றவர்களின் பாதையை தொடருங்கள் .

அவர்களின் ஆலோசனையை பெறுவதற்கு எல்லா வகையிலும் முயன்று வெற்றிக்கனியை சுவைத்திடுங்கள் .

வெற்றியாளர்கள் சொல்வதை சந்தேகப்படாதீர்கள்.

வெற்றியாளர்களை சந்தேகப்பட்டு , அவர்களை தொடராது போனால் நஷ்டப்படப்போவது யார் ? முடிவு செய்து கொள்ளுங்கள் .

" எடுத்து வைக்கும் ஒவ்வொரு அடியிலும் விழிப்பாக இருந்தால் போக வேண்டிய இடத்தை நிச்சயமாக அடையலாம்."

திட்டம் – கனவு – செயல் – வெற்றி

‘மூளை என்ற நுண்ணிய இயக்கம் கொண்ட, துடிப்பான செயலாக்கம் கொண்ட, வெற்றிப் பாதையில் செலுத்தக் கூடிய, உயரிய, விலைமதிப்பற்ற கருவியை நமக்கு படைத்தவன் பரிசளித்துள்ளான். அதை சரியாக பயன்படுத்த தெரியாமல் வெற்றிப்படிகட்டுகளில் ஏறுவதற்கு பதிலாக, படுத்துறங்கி கொண்டுள்ளனர் பலர்.

திட்டமிடுங்கள்

ஏன் வெற்றி பெற முடியவில்லை? நம்மிடம் என்ன, என்ன குறைபாடுகள் தடைக்கற்களாக உள்ளன. நம்மிடம் உள்ள நிறைகள் என்ன?

ஒரு தனித்தாளில் அவசியம் எழுதுங்கள். அலசுங்கள். சோம்.....................

கனவுகள் நினைவாக....

கனவுகள் நினைவாக... நினைத்தவை எல்லாம் நிஜமாக.... கண்ணுக்குள் கண்ட கனவு கண் முன் நடக்க ஒரு சில யோசனைகள்.

ஒரு சிலர் எவ்வளவோ பேரும் புகழும் பெறுகின்றனர். அவர்களது பணியில் சிறந்து விளங்குகின்றனர். எட்டாத புகழை அடைகின்றனர். இதெல்லாம் அவர்களால் எப்படி முடிந்தது. இதோ அந்த வெற்றியின் ரகசியம்.

நமது வாழ்க்கை எப்போதுமே .......................

வெற்றிக்குப் பத்து வழிகள்!

நீங்கள் எப்போது மரணிப்பீர்கள் என்று உங்களால் கூற முடியுமா? நிச்சயமாக உங்களால் முடியாது! அடுத்த ஆண்டு மரணிக்கலாம்; அடுத்த மாதம் அல்லது அடுத்த வாரம் அல்லது அடுத்த நிமிடம்கூட நீங்கள் மரணிக்கலாம். ஆகவே அதற்குமுன்
உங்கள் வாழ்வில் நீங்கள் என்ன அடைந்தீர்கள்?
உங்களின் கனவு மற்றும் இலட்சியம் என்ன?
உங்கள் வாழ்க்கைக்காக நீங்கள் போட்டுள்ள ...................................

Saturday, November 12, 2011

சோம்பல் ஒரு சோக காரணி

முதுமையிலும் மூளையின் ஆற்றல் குறையாதிருக்க …

உங்களைக் குறைத்துக் கொள்ளாதீர்கள்!


நம்மில் பலருக்கு அடுத்தவர்கள் நம்மைக் குறைத்து மதிப்பிடுவதாக ஒரு மனத்தாங்கல் இருக்கிறது. அதனால் நமக்கு உரிய கௌரவம் தராமல் இருப்பதாக வருத்தமும் இருக்கிறது. ஆனால் உண்மையில் மிகவும் வருந்தத் தக்க விஷயம் என்னவென்றால் அடுத்தவர் நம்மைக் குறைத்து மதிப்பிடுவதோ, நமக்குரிய கௌரவம் தராமல் இருப்பதோ அல்ல. நம்மை நாமே குறைவாக மதிப்பிட்டு, நம்மை நாமே முழுமையாக கௌரவிக்கத் தவறி விடுவது தான்.

ஒவ்வொரு மனிதனும் தன் திறமைகளை முற்றிலும் உணராதவனாகவே இருக்கிறான். அதனால் அவற்றை முழுவதுமாகப் பயன்படுத்தாதவனாகவே வாழ்கிறான். ஐன்ஸ்டீன் போன்ற மாமேதைகளே தங்கள் மூளைத் திறனில் சுமார் 15 சதவீதம் வரை தான் பயன்படுத்தியிருக்கக்கூடும் என்று ஆராய்ச்சியாளர்கள் கூறுகிறார்கள். அதனால் மனிதன் தன்னால் என்னவெல்லாம் முடியும், முடிவதும் எந்த அளவு முடியும் என்பதை அறியாதவனாகவே வாழ்ந்து மரிக்கிறான். இதில் தாழ்வு மனப்பான்மை என்ற கொடுமை வேறு அவனை சில நேரங்களில் ஆட்டிப் படைக்கின்றது.

நம்மால் என்னவெல்லாம் முடியும் என்பது முயன்று பார்க்காத வரை நமக்குத் தெரிவதில்லை. முன் கூட்டியே முடியாது என்று தீர்மானித்து விட்டாலோ முயற்சி செய்யும் சிரமத்தையும் நாம் எடுத்துக் கொள்வதில்லை.

உயர்த்திக் கொள்வது என்பது கர்வப்படுவது என்ற அர்த்தத்தில் சொல்லப்பட்டதல்ல. அது தன்னைத் தானே உயர்வாகச் சொல்லிக் கொள்வதல்ல. நம் திறமைகளையும், சக்திகளையும் உயர்த்திக் கொள்வதே உண்மையான உயர்த்திக் கொள்ளல். நம் திறமைகளின் எல்லைகளை நீட்டிக் கொண்டே செல்வது தான் உயர்த்திக் கொள்ளல். எந்த சூழ்நிலையும் நம்மைக் குறைத்து விட அனுமதிக்காமல் நிமிர்ந்து நிற்பது தான் உயர்த்திக் கொள்ளல். அதெல்லாம் அபூர்வமான சிலருக்குத் தான் முடியும் என்று மட்டும் சொல்லி உங்களைக் குறைத்துக் கொள்ளாதீர்கள். ஹெலன் கெல்லரும், நிக் வூயிசிச்சும் கூடத் தங்களைக் குறைத்து எண்ணி விடாமல் இருக்கையில் அவர்களைக் காட்டிலும் நல்ல நிலையில் பிறந்த நாம் நம்மைக் குறைத்துக் கொண்டால் அது கடைந்தெடுத்த முட்டாள்தனமாகத் தான் இருக்கும்.


ஆழ்மனதின் அற்புத சக்திகள்


இந்த உடலும், மனமும் உங்களது கருவிகள் என்பதை உறுதியாக உங்களுக்குள் பிரகடனப்படுத்துங்கள். ”நான் பிரம்மாண்டமான பிரபஞ்ச சக்தியின் ஒரு அங்கம். நான் உடலல்ல. மனமும் அல்ல. நான் அந்த இரண்டையும் இயக்கும் எஜமான். நான் உடலையும், உள்ளத்தையும் சார்ந்தவன் அல்ல. அவற்றால் தீர்மானிக்கப்படுபவனும் அல்ல, இயக்கப்படுபவனும் அல்ல. அவற்றை தேவைப்படும் போது, தேவைப்படும் விதத்தில் நான் பயன்படுத்த வல்லவன்”. (வார்த்தைகள் இப்படியே இருக்க வேண்டும் என்பதில்லை. அவற்றின் மீது நீங்கள் சக்தி செலுத்தவும், இயக்கவும் வல்லவர் என்ற செய்தியைத் தெளிவாகச் சொல்லும்படியாக இருத்தலே அவசியம்)

மேலும் சொல்லிக் கொள்ளுங்கள். “உடலையும், உள்ளத்தையும் என் முழுக் கட்டுப்பாட்டில் வைத்துள்ள நான் என்னுள்ளே என் இயல்பான எல்லையில்லாத சக்தியை உணர்கிறேன். எல்லையில்லாத அமைதியை உணர்கிறேன். இந்த மகாசக்தியும், பேரமைதியும் என் பிறப்புரிமை. உலக நடப்பின் தோற்றங்களில் நான் இவற்றை இழந்து விட மாட்டேன்”

இப்படி உங்களுக்குள் சொல்லிக் கொள்ளும் போது ...

ஆறாத மனக்காயங்களை ஆற வைப்பதெப்படி?

ஒரு முறை ஹைதராபாத்தில் நடைபெற்ற சுவாமி சுகபோதானந்தாவின் வாழ்வியல் பயிற்சி முகாமில் பங்கு பெற்றவர்களிடம் சுகபோதானந்தா ஒரு கேள்வியைக் கேட்டார். “உங்கள் மனதில் நீண்ட நாட்களாக ஆறாமல் இருக்கும் காயம் என்ன?”

பலரும் தங்கள் மனதில் இருந்த ஆறாத காயங்களைப் பற்றி சொன்னார்கள். கிட்டத்தட்ட எல்லாமே அடுத்தவர்கள் இழைத்த அநியாயங்களாகத் தான் இருந்தன. ஒருவர் தன் அரசாங்க வேலையில் இருந்து ராஜினாமா செய்து தன்................

எல்லாம் தகரும் தருணங்களில்....!

எல்லாம் தகரும் தருணங்களில் நிலைகுலைந்து போய் விடாதீர்கள். நடப்பதை ஜீரணிக்க முடியாமல் திண்டாடாதீர்கள். எதையும் நம்பி யாரும் இல்லை என்று தைரியமடையுங்கள். இறைவன் ஒன்றை எடுத்துக் கொண்டால் இன்னொன்றைத் தராமலிருக்க மாட்டான் என்ற நம்பிக்கையை வைத்திருங்கள். அமைதியாக அந்த இன்னொன்றைத் தேடுங்கள். அந்த நேரங்களில் அமைதியிழக்காமல், நம்பிக்கை இழக்காமல் நீங்கள் அப்படித் தேடுவீர்களானால் பெறுவது இழப்பதற்கு முன்னிருந்த நிலையை விட உயர்வான நிலையாகவே இருக்கும், அல்லது உயர்வான நிலைக்குப் போகும் பாதையின் துவக்கமாக இருக்கும்.!

விடாமுயற்சியே வெற்றியின் ரகசியம்

* நாம் நினைக்கும் ஒவ்வொரு எண்ணமும், நாம் செய்யும் ஒவ்வொரு செயலும் குறிப்பிட்ட காலத்திற்குப் பின் சூட்சுமமாக நம்மிடமே திரும்புகின்றன.
* யாருடைய நம்பிக்கையையும் கலைக்க முயலாதீர். முடியுமானால் இன்னொரு நல்ல நம்பிக்கையை அவனுக்குள் செலுத்துங்கள்.
* இயற்கைக்கு கீழ்ப்படியாமல் இருப்பது தான் மனித சமுதாயத்தின் வளர்ச்சியாகும். வரலாற்றைப் பார்த்தால் மனிதவளர்ச்சி இதனால் தான் உண்டாகிறது.
*மனிதன் தன் வாழ்க்கையைத் தானே உருவாக்கிக் கொள்கிறான். தனக்குத் தானே அமைத்துக் கொள்ளும் விதிகளைத்தவிர, வேறு எதற்கும் மனிதன் கட்டுப்படத் தேவையில்லை.
* தைரியமாக இருங்கள். உங்கள் விதியை நிர்ணயிக்கும் சக்தியைப் பெறுவீர்கள். நல்ல செயல்களுக்கும், இதயப்பூர்வமான நன்மைகளுக்கும் இறைவனே முன்நின்று உதவுவார்.
* தொடங்கப்பட்ட முயற்சியில் தடை உண்டானால், மனவலிமையை மேலும் அதிகப்படுத்தி பாடுபடுங்கள். விடாமுயற்சியுடன் செயலை நிறைவேற்றி மகிழ்வதே உயர்வாழ்விற்கான அறிகுறியாகும்.

மனஅழுத்தம் நீங்க 30 வழிகள்

பின்னுங்க

தங்கள் துறை மீதான தீராத காதல், தங்கள் துறையில் உயர்ந்த இடத்தை அடையும் வெறி, அந்த இடத்தை அடையும் வரை வெற்றி தோல்வி பற்றி கவலைப்படாத உழைப்பு. இதெல்லாம் உங்களிடம் இருந்தால் இன்சூரன்ஸில் நாளைய நம்பிக்கை நட்சத்திரம் நீங்கள்தான்.

வெற்றிக்கு என்ன செய்ய வேண்டும் எல்லோருக்கும் தெரியும். ஆனால் அதை செயல் படுத்துவதில்லை. தெரியும் என்பதை செயலாக மாற்றுபவர்கள் வெற்றி பெறுகிறார்கள்.
இன்றைக்கு பலர் படிகளில் ஏறி மேலே செல்ல விரும்புவதில்லை. எஸ்கலேட்டரில் போவது போல முதல் படியில் காலை வைத்தவுடன் மேலே போய்விட வேண்டும் என்று தான் நினைக்கிறார்கள். அதற்கு எதாவது டிரிக்ஸ் இருக்குமா என்பதை தெரிந்து கொள்ளத்தான் விரும்புகிறார்கள். காரணம் எத்தனையோ வெற்றிகளை, வெற்றியாளர்களை நம்மால் எளிதில் பார்க்க முடிகிறது. ஆனால் அதற்கு பின்னால் உள்ள உழைப்பை, உணர்வை நம்மால் பார்க்க முடிவதில்லை.

உழைத்தால்தான் உயர்வு என்பது புரிகிறது. ஆனால் உழைக்க முடியாதபடி மனம் அவ்வப் போது சோர்ந்து போய் விடுகிறதே. எப்போதும் உற்சாகமாக இருக்க என்ன செய்ய வேண்டும் ?

இலக்கே வெற்றி.
நம்ம நிலமைக்கு தகுந்த மாதரிதான் ஆசைப்பட வேண்டும். ஏழைக்கு ஏற்ற எள் உருண்டை’ என்பது அவர்களின் கொள்கை. இதில் புரிந்து கொள்ள வேண்டியது, எள்ளுருண்டையை மட்டுமே ஆசைப்படுவதால் தான் நாம் இன்னும் ஏழையாகவே இருக்கிறோம் என்பதுதான்.

உயர்ந்த இலக்குகள்தான் மனிதனுக்கு தீராத உற்சாகத்தை தருகிறது.
உயர்ந்த இலக்குகள் உயர்ந்த எண்ணங்களை தோற்றுவிக்கிறது. உயர்ந்த எண்ணங்களே உயர்ந்த செயல்களை தோற்றுவிக்கிறது. உயர்ந்த செயல்கள் பெரிய வெற்றியை தருகிறது. ஆக, இலக்குகளே வெற்றிகளாக மாறுகிறது.


Friday, November 11, 2011

வல்லமை தாராயோ…

பயன்தர தக்க இலக்கை முதலில் தீர்மானித்து விட்டால் நம்பிக்கை தானாக பிறக்கும். அதுதான் வல்லமை. அடுத்த படி என்ன? தொடர்ந்து அதைப் பற்றிய கனவு. எண்ணிக் கொண்டே இருப்பது.

திட்டமிட்ட இலக்கை நோக்கி அடுத்த பயணம். அதைப் பற்றி தொடர்ந்து எண்ணுவது இடைவிடாமல் சிந்திப்பது. ஒன்றைத் தொடர்ந்து பார்க்கிற பார்க்கிற பார்வை கூர்த்த பார்வை. ஆழமாக அழுத்தி ஒன்றை மனதிற்கு சொல்லி விட்டீர்களென்றால் அது தொடர்பான விஷயம் எங்கோ ஓர் கூட்டத்திற்கு நடுவில் நடந்தால் கூட அதைப் பார்க்க ஆரம்பித்து விடுவீர்கள்.

கூர்த்த பார்வை என்பது இலக்கை நிர்ணயித்து ஆழப்படுத்தி விட்டால் தானாய் வந்துவிடும். தேடிப் போக வேண்டியதில்லை. இருக்கிற இடத்திலேயே மிகப் பரந்த கூட்டத்திற்கு நடுவிலே கூட உங்களுக்கு எது தேவையோ அதை மட்டும்தான் உங்கள் கண் பார்க்கும். அதையே காதும் கேட்கும்.

துணிந்து நாம் எடுக்கிற முடிவு அந்தப் பாதையில் நாம் வைக்கிற முதல் அடி. அதுதான் முக்கியம். மனிதன் பெரிய பாறாங்கற்களால் இடறி விடுவதில்லை. பெரிய பாறையால் தடுக்கி விழுந்துவிட்டான் என்ற செய்தி உண்டா? கிடையாது. சிறு சிறு கற்கள்தான் நம்மை இடறச் செய்கின்றன. சிறுசிறு தடைகள்தான் நம்மை கவிழ்த்து விடுகின்றன. அந்த சிறு தடைகளால் வருகிற பயம்தான் பெரிய தடையை கடக்கிறவரை நாம் பயணிப்பதே கிடையாது. முதலடி எடுத்து வைக்கிற துணிவு அந்த முதல் நம்பிக்கை வந்து விட்டதென்று சொன்னால் எதையுமே சாதிக்கலாம்.

துணிந்த தொடக்கம் என்பது சாதாரண விஷயம் அல்ல. அந்த இடத்தில்தான் மனிதர்கள் தோற்றுப் போகிறார்கள். அவநம்பிக்கை அடைந்து விடுகிறார்கள்.

தொடரும் முயற்சி எப்படி வருமென்று கேட்டால் பெரிய விஷயத்தை கையிலெடுத்துக் கொண்டால் மனது அதையே பூதாகரமாக கற்பனை செய்து கொண்டிருக்கும். அடையும் இலக்கின் பரிமாணத்தை மனது எண்ணி யெண்ணிப் பார்த்துக் கொண்டிருக்கும். அப்போது நாம் எடுத்து வைக்கின்ற ஒவ்வொரு அடியிலும் தளர்ச்சி வரும், தடை வரும், எதிர்ப்பு வரும், எதிர்மறை சிந்தனைகள் தலையெடுக்கும். அதை உதறி எறிந்துவிட்டு போக வேண்டு மென்றால் இலக்கின் பரிமாணத்தை சிறுசிறு கூறுகளாகப் பிரிக்கிற மனோபாவத்தை வளர்த்துக் கொள்ள வேண்டும்.

இலக்கை நோக்கிய பயணத்தை ஒரே மூச்சில் போகிற பயணமாக முடிவு செய்யக் கூடாது. அதை சிறுசிறு பகுதியாக இன்றைக்கு இதை செய்ய வேண்டும். நாளைக்கு அதை செய்ய வேண்டும் என்று அதை உடைத்து சிறியதாக மாற்றுகிற போது மனதிலிருக்கிற அச்சம் நம்மை விட்டுப் போகும். உங்கள் முன்னால் வைக்கப் படுகிற தடைகளை நீங்கள் துணிந்து கடப்பதற்குரிய நம்பிக்கையை அது உங்களுக்குத் தரும். இன்னும் சொல்லப்போனால் அது வெற்று விமர்சனங்களையும் வேண்டாதவர்களுடைய ஏச்சுப் பேச்சுகளையும் இந்தப் பயணத்தின் இந்த நேரத்தில்தான் வந்து சேரும். வேண்டாத விமர்சனங்கள் வரும். இவன் இதைச் சாதித்து விடுவானா என்ற குரல் நம் காதிலே கேட்கும். விமர்சனங்களால் விழுந்து போகாத இதயத்தை வசப்படுத்திக் கொள்கிறானோ எந்த மனிதனுக்கு அது வாய்க்கிறதோ அவன் சாதனையாளனாக முடியும். விமர்சனங்கள் வராத மனிதன் கிடையாது. வந்தே தீரும். தொடர்ந்த முயற்சியில் அந்தத் தடையை தாண்டிச் செல்கிறபோது மனது தளரும். பாதையில் தடை வருகிறபோதெல்லாம் மீண்டும் மீண்டும் கடலிலிருந்து நீரை முகர்ந்து முகர்ந்து மீண்டும் மழை பொழிவதைப்போல மீண்டும் நம்பிக்கை எனும் நீரை முகர்ந்து முகர்ந்து இதயத்தில் பாய்ச்ச வேண்டும். அதை தொடர்ந்து செய்ய வேண்டும்.

வருகிற தடைகள் அவை தருகிற துன்பங்கள் நமக்கு வருகிற தளர்ச்சி அவை அத்தனையும் நீங்கிப் போகும். ஏனென்றால் இலக்கும் சரியாக இருந்து அதைப் பற்றிய எண்ணமும் சரியாக இருந்து போகிற அந்தப் பாதையில் கால் வைத்து நடக்க ஆரம்பித்துவிட்டால் எதுவும் தடையாகத் தெரியாது. உங்கள் பயணம் தொடர்ந்து நடக்கும். இலக்கை தீர்மானித்துவிடலாம். ஆனால் இலக்கை நோக்கிப் பயணிக்கிற கால அளவை மட்டும் நம்மால் தீர்மானிக்கமுடியாது. வெற்றிக்கு நாம் தீர்மானம் செய்த காலம் கொஞ்சம் நீட்டிக்கலாம். இரண்டு வருடத்தில் முடிக்கலாம் என்று நினைத்தது மூன்று வருடமாகலாம். அல்லது முயற்சியின் காரணமாக முன்கூட்டியே கூட முடிவைத் தந்துவிடலாம். எவ்வளவு நேரத்தை வீணடிக்கிறோம். காலையிலிருந்து எத்தனை பேரிடம் வளவளவென்று பேசிமுடித்து அவர்களும் சலித்து போய் நாமும் சலித்து எழுந்து விடுகிறோம். அந்த நேரம் எதற்குரிய நேரம். எத்தனை பெரிய காரியங்களை ஆற்றுவதற்குரிய நேரத்தை எப்படி தொலைத்துக் கொண்டிருக்கிறோம் என்று திரும்பிப் பார்க்கிற சிந்தனையை வளர்த்துக் கொண்டோமேயானால் சாதனைகள் தொடர்ந்து வரும்.

நம்மால் முடியும் என்று நம்மை வலியவனாக எண்ணிப் பார்க்கிற கற்பனை வருகிறபோது அது வலிமையைத் தரும். இலக்கை நோக்கிய பயணத்தில் இலக்கை பற்றி அடிக்கடி சிந்தித்துப் பார்க்க வேண்டும். இலக்கின் பரிமாணத்தை எளிதாக கற்பனை செய்கிற இதயத்தை வளர்த்துக் கொள்ள வேண்டும். உந்தும் சக்தியாக உங்கள் உள்மன உரையாடல்கள் உங்களை வலிமையுடையவர்களாக ஊக்கப் படுத்துகிற அதே வேளையில் நீங்கள் சென்று சந்திப்பதாக நீங்கள் அடைய விரும்பியதாக எதை நீங்கள் தீர்மானமாக இலக்காக வைத்திருக்கி றீர்களோ அந்த இலக்கின் பரிமாணத்தை குறைத்து மதிப்பிடுவதற்கும் நீங்கள் பழகிக் கொண்டால் எளிதாக முடியும்.


வெற்றியின் ரகசியம்

தன்னம்பிக்கை

10 வழிமுறைகளில் எத்தனை வழிகளை நீங்கள் கையாள முடியும் என்று நினைக்கின்றீர்கள்?

அனைத்துமா? ஆம் இதுதான் முதல் வழிமுறை. வெற்றி பெற தன்னம்பிக்கை தேவை. அனைத்தையும் செய்ய இயலும் என்ற தன்னம்பிக்கை. நம்பிக்கையற்றவர்களையும், அவநம்பிக்கையையும் தவிருங்கள். வெற்றி உங்கள் பக்கத்தில் வரும்.

லட்சியம்

உங்களது லட்சியத்தை அல்லது நீங்கள் அடைய விரும்பும் ஒன்றை முதலில் தேர்வு செய்து கொள்ளுங்கள். ஏனெனில் ஏதாவது ஒன்றை சாதிக்க வேண்டுமெனில் அது என்ன என்பதை முதலில் தீர்மானித்துக் கொள்ள வேண்டும்.

முயற்சி

நீங்கள் என்னவாக விரும்பினீர்களோ அதற்கான அனைத்து முயற்சிகளையும் செய்யுங்கள். எதை நினைத்தும், பயந்தும் முயற்சியில் இருந்து பின்வாங்காதீர்கள். முயற்சியுடையார் இகழ்ச்சி அடையார்.

கற்றுக்கொள்ளுங்கள்

படியுங்கள். கற்றுக் கொள்ளுங்கள். எப்போதும் எதையாவது கற்றுக் கொண்டே இருங்கள். புதிது புதிதாக எதையாவது அறிந்து கொண்டே இருங்கள். உங்களுக்கு எதில் விருப்பமோ அதைப் பற்றி அதிகமாக அறிந்து கொள்ள முன்வாருங்கள். கற்றுக் கொள்வதை எப்போதும் நிறுத்த வேண்டாம்.

உழைப்பு

லட்சியத்தை நோக்கி கடுமையாக உழையுங்கள். உங்கள் பார்வை எப்போதும் லட்சியத்தை நோக்கியதாக மட்டுமே இருக்க வேண்டும். லட்சியத்தை பார்க்கும் கண்களுக்கு அதன் வழியில் இருக்கும் தடைகள் தெரியாது. அப்போதுதான் உங்கள் உழைப்பு பலனை அளிக்கும்.

தெளிவுறுங்கள்

லட்சியம் குறித்து பல்வேறு விஷயங்களைப் பற்றி தெரிந்து கொள்ளங்கள். நீங்கள் செய்யும் தவறுகளை திருத்திக் கொள்ளுங்கள். தவறுகள் மூலமாகவும் பலவற்றை கற்றுக் கொள்ளலாம். தவறுக்காக எப்போதும் கவலைப்படாதீர்கள். உங்கள் தவறுகள்தான் பல சமயங்களில் நல்ல முடிவுகளை எடுக்க உதவும் என்பதை மனதில் கொள்ளுங்கள்.

குறுக்கீடு

உங்கள் லட்சியத்தை கெடுக்கும் வகையில் நபரோ அல்லது பொருளோ, பணமோ குறுக்கே வருவதை அனுமதிக்காதீர்கள். உங்களது அனைத்து எண்ணங்களையும் லட்சியத்தை நோக்கியே செலுத்துங்கள். உங்கள் நேரத்தை அதற்காகவே செலவிடுங்கள்.

தனித்துவம்

உண்மையாக இருங்கள். உங்களை நம்புங்கள். சுயமாக சிந்தித்து சொந்த திறமையை வெளிப்படுத்துங்கள். மற்றவர்களை பின்பற்றி சென்றால் தனித்துவம் இருக்காது.

கலந்தாய்வு

எந்த மனிதனும் தனியல்ல. எங்கும் எப்போதும் ஒரு குழுவாகவே இருக்க வேண்டும். உங்களது எண்ணங்களை, சிந்தனைகளை மற்றவர்களுடன் கலந்து பேசுங்கள். அவர்களையும் பேசச் சொல்லுங்கள். மற்றவர்களையும் ஊக்கப்படுத்துங்கள். பயிற்சி, ஊக்கம் போன்றவற்றை ஒருசேரப் பெருங்கள்.

பொறுப்பேற்பு

எப்போதும் யாரையும் ஏமாற்றாதீர்கள். யாரிடமும் பொய் சொல்லாதீர்கள். உறுதி அளித்தால் அதை எப்பாடுபட்டாவது நிறைவேற்றுங்கள். தவறு செய்தால் அதை ஒப்புக் கொள்ளுங்கள். நீங்கள் செய்யும் செயலுக்கு பொறுப்பேற்றுக் கொள்ளுங்கள்.

நேர்மை, கீழ்பணிதல், பொறுப்புடன் செயலாற்றுதல் போன்றவை இல்லாமல் எந்த காரியத்தையும் சாதிக்க இயலாது.

எனவே இவற்றை கடைபிடித்து உங்களது லட்சியத்தை நிறைவேற்றுங்கள். நாம் பிறந்தோம், வாழ்ந்தோம், இறந்தோம் என்றில்லாமல் வாழ்ந்ததற்கான சுவடுகளை ஏற்படுத்திவிட்டுச் செல்லுங்கள்.

உங்கள் கனவுகளை உணருங்கள்

* மனதில் எழும் உறுதியற்ற நிலையை மாற்றுங்கள். அதன் வழியாக ஆக்கும் திறனை பெறலாம்.

* உங்களின் மீது கூடுதலான நம்பிக்கை வையுங்கள். உங்களுக்கு எந்த செயல் முக்கியம் என்று தோன்றுகிறதோ, அதை முடிப்பதற்கான நடவடிக்கைகளை தீவிரப்படுத்துங்கள்.

* சாந்தமாக இருங்கள். உங்களுடைய கோபம், தன்னலம், பயம் மற்றும் சந்தேகங்களை விட்டொழியுங்கள்.

* புதியனவற்றை கற்கும் போது மனதை காலியாக வைக்க வேண்டும். காலியான பாத்திரத்தில் பொருளை நிரப்புவதைப் போல புதிய விஷயங்களை கற்க வேண்டும்.

* உங்களுக்கு தேவையானவை எது? தேவையற்றவை எது? என்பதை அறிவதில், மிகவும் முன்னெச்சரிக்கையுடன் செயல்பட வேண்டும்.

* அனைத்து தரப்பையும் உற்றுநோக்கி உங்கள் கனவிற்கு உருவம் கொடுங்கள்.

* துணிவு, தெளிவு மற்றும் ஈடுபாட்டுடன் இருங்கள். உங்களுடைய கனவையும் எண்ணங்களையும், விருப்பம் இருந்தால் மற்றவர்களுடன் பகிர்ந்து கொள்ளலாம்.

* நேர்மையான வாழ்வை வாழுங்கள்.

* குறிக்கோள், பணி, கற்பனை, வாழ்க்கைத்தொழில் உள்ளிட்டவற்றின் வாயிலாக உங்கள் கனவுகளை மெருகேற்றுங்கள்.

* உங்களையும் உங்கள் கனவையும் முழுமையாக நம்புங்கள்.

* உங்கள் வழியில் வரும் நல்ல சந்தர்ப்பங்களை தவறவிடாதீர்கள்.

மேற்கூறிய சில வழிகளை பயன்படுத்தி, உங்கள் கனவுகளை உணருவதோடு மட்டுமல்லாமல் அதை நிறைவேற்றும் வழியையும் அறியலாம்.