Friday, November 4, 2011

கவிதைகள்

தோல்விகளைக் கண்டஞ்சித்
தொடருமென எண்ணாதே
ஆல்விழுதாய் நம்பிக்கை
அற்றவனோ வென்றதில்லை!

முயற்சியொன்றே
மூச்சாக இருந்தால்
யார் உன்னைத் தடுக்க முடியும்
எப்படி உன்னை ஒடுக்க முடியும்

உன்
லட்சியத்திற்காக
வேதனைப்படு

உன்
குறிக்கோளுக்காக
கஷ்டப்படு

ஓயாத உழைப்புக்கு
வெகுமதியே கிடையாது

சோதனையிலும்
சாதனை காணுங்கள்
மலர்மாலைகள்
கழுத்தில் விழும்

தொடர்ந்து
வெற்றியை உமதாக்குங்கள்
தேகத்தின்
கைதட்டல்கள்
உமக்காகும்

No comments:

Post a Comment