Sunday, November 20, 2011

சுறுசுறுப்பு வேணுமா

கற்றல் என்பது மூளை சம்பந்தப்பட்ட வேலை. படிக்கும் காலத்தில் மூளையை சுறுசுறுன்னு வைத்து கொண்டிருந்தால், உங்களை எந்த காலத்திலும் யாராலும் ஜெயிக்க முடியாது. எந்த விஷயமும் மறக்காது. நிறைய சுவையான விஷயங்கள் பேசுவதால், ஏராளமான நண்பர்கள் கிடைப்பர். உங்களுக்கு தெரியாத விஷயமே கிடையாது என்னும் வகையில் பெயர் வாங்குவீர்கள். மூளை சுறுசுறுன்னு இருந்தா ஏராளமான அறிவு செல்வங்களை அது கொண்டு வந்து சேர்க்கும். மூளை சுறுசுறுப்பாக இருப்பதற்கு இதோ சில வழிகள்:

வழி1: தினமும் மூளைக்கு வேலை கொடுங்கள். புதிர், கணக்கு, குறுக்கெழுத்து, போன்ற எளிய விளையாட்டுகளை விளையாடுங்கள்.
வழி2: தினமும் படிங்க. படிக்கிறது நிறைய புதுத் தகவல்களை தரும்.
வழி3: மூளையின் வலது அரைக்கோளப் பகுதியைப் பலப்படுத்துகிற சமாசாரம் இசையில் இருக்கு. நல்ல இசையை கேட்பது உணர்வு பூர்வமான அறிவாளியாக உங்களை உருமாற்றும்.
வழி4: தினமும் 10 முதல் 15 நிமிடங்களுக்கு தனியே அமர்ந்து உள்ளுக்குள் ஆழமா மூச்சை இழுத்து விடுங்க. மூளைக்கு உடனடியாக ஆக்சிஜன் பாய்ஞ்சு சடார்னு அது முழிச்சுக்கும். உங்க உடம்பு விழிப்புணர்வோட உஷாரா செயல்பட ஆரம்பிக்கும்.
வழி5: நல்ல சுகமா தூங்குங்க. தூக்கம் மூளைக்கு ஓய்வு கொடுத்து புத்துணர்ச்சி பெற வைக்கிறது. எட்டு மணி நேரம் போதும். "கும்பகர்ண பட்டம்' வேண்டாம் சரியா!
வழி6: நிறைய காற்கறிகளை சாப்பிடுங்க. முடிஞ்சா பச்சையாக சாப்பிடுங்க.

No comments:

Post a Comment