Friday, November 11, 2011

செயலாக்குவோம்

ஓரிடத்தில் அமைதியாக அமருங்கள். கண்களை மூடிக்கொள்ளுங்கள். மூன்று முறை ஆழ்ந்த சுவாசம் செய்யுங்கள். மனத்தைத் தளர்வாக வைத்துக்கொள்ளுங்கள்.

செய்ய வேண்டிய செயலை மனத்தில் கொண்டு வாருங்கள். அதைச் செய்யாவிட்டால் வருகிற பின்விளைவுகளை – பாதிப்புகளை மனத்தில் நினைத்துப்பாருங்கள்.

அடுத்து, செயலைச் செய்து முடித்துவிட்டால் வருகிற பயன்களை நல்விளைவுகளை – மனத்தில் உண்டாகும் திருப்தி உணர்வை மனதில் கொண்டு வாருங்கள்.

செயலைச் செய்யும் போது துன்பம் இருந்தாலும், விளைவு இயற்கை மாறுவதை உணருங்கள்.

மெதுவாகக் கண்களை விழித்துக் கொள்ளுங்கள்.

பின் செயலச் செய்யுங்கள். மனம் மறுத்தாலும் பயன நினைத்துச் செயல்படுத்துங்கள்.

இது அடிக்கடிச் செய்யக் செய்ய இதுவே இயல்பாக மாறும்.

..............................

No comments:

Post a Comment