தோல்வியின் தோழா !
பயணிக்கும் முன்பே
படுத்துக் கொண்டு
பாதைகள் தூரம்
பாதங்களில் உதிரம்
படைக்கும் கடவுளே ! - என்னை
படைத்தது ஏனோ ? - என
பரிதவித்தால்
பரிகாசம் செய்யாமல்
பரிவட்டமா தருவார்கள் !
காயங்கள் தாங்காமல்
கல் - தெய்வமாவதில்லை;
வருத்தங்கள் வாராமல்
வாழ்வில் வசந்தம் வருவதில்லை.
No comments:
Post a Comment