Sunday, November 13, 2011

"தன் திறமைகளை பயன்படுத்திக்கொள்ள தெரிந்தவன் அறிவாளி "

வெற்றிகரமான எல்லா மனிதர்களுக்கும் பொதுவாகவுள்ள அடிப்படையான அத்தியாவசியமான குணம் தன்னால் வெற்றி பெற முடியும் என்ற நம்பிக்கையே .....

ஏனோ தானோ என்றோ அல்லது எப்போதோ மட்டும் தோன்றும் நம்பிக்கையை வைத்து உங்கள் குறிக்கோளை அடையவே முடியாது .

பொறுமை மிக மிக அவசியம் !

மீன் பிடிக்க செல்கிறவர்கள் , பெரிய மீனாய் வேண்டுமென்றால் , இரையை முள் கொக்கியில் கோர்த்துவிட்டு கரையில் பொறுமையாகத்தான் காத்திருக்க வேண்டும் .

எழுதும்பொழுதும் , திரும்ப திரும்பப் படிக்கும்பொழுதும் உங்கள் எண்ணங்கள் தெளிவடைகின்றன. அப்பொழுது உங்கள் லட்சியத்தை அடையும் வழிகள் உங்களுக்கு தெளிவாகத் தெரிகின்றன.

நீங்கள் விழிப்புணர்வுடன் ஆர்வத்தோடு இருக்கும் பொழுது ஒவ்வொரு நாளும் இலட்சியத்தை நெருங்க முடியும் .

எந்தத் தடையையும் , எதிர்மறை உணர்ச்சிகளையும் உங்களை நெருங்க விடாதீர்கள் .

சிந்தனைகளை சிதற விடாதீர்கள் .

நாம் நன்றாக இருக்கும் வரை நம் மனம் சரியான திசையில் சரியான சந்தர்ப்பத்தில் செயல்பட்டு மிகப்பெரிய வெற்றியை ஏற்படுத்திக்கொடுக்கும்.

நீங்கள் செய்யப்போவதென்ன ?

ஒரு வெற்றியாளராக வேண்டும் என்றால் எந்தத் துறையானாலும் ,அத்துறையில் வெற்றி பெற்றவர்களின் பாதையை தொடருங்கள் .

அவர்களின் ஆலோசனையை பெறுவதற்கு எல்லா வகையிலும் முயன்று வெற்றிக்கனியை சுவைத்திடுங்கள் .

வெற்றியாளர்கள் சொல்வதை சந்தேகப்படாதீர்கள்.

வெற்றியாளர்களை சந்தேகப்பட்டு , அவர்களை தொடராது போனால் நஷ்டப்படப்போவது யார் ? முடிவு செய்து கொள்ளுங்கள் .

" எடுத்து வைக்கும் ஒவ்வொரு அடியிலும் விழிப்பாக இருந்தால் போக வேண்டிய இடத்தை நிச்சயமாக அடையலாம்."

No comments:

Post a Comment