Friday, November 4, 2011

தொலை நகரம்


இன்னும் கொஞ்ச தூரம் தான்
கால்களைக் கொஞ்சம்
வலுவாக்கு.

அடுத்தவன் கனவுகளுக்குள்
படுத்துக் கிடக்கும்
உன் பார்வைகளின்
சோர்வகற்று.

அறுவடைக் காலத்தில்
நண்டு பிடிப்பதை விட
கதிர் அறுப்பதல்லவா
அவசியம்,

வா,
இன்னும் கொஞ்ச தூரம் தான்.
.................


நிழல் பூசிய நிஜங்கள்

உன்
பலம் தேடிய பயணம்
தொடர்வதே சிறந்தது,
பிறர் பலம் கண்ட
பயம் அல்ல.
.............

புரிந்து கொள்
என் பிரிய நண்பா ..

நீ
யாரையோ பார்த்து
பிரமிக்கும் அதே வினாடியில்,
யாரோ
உன்னைப் பார்த்தும்
பிரமிக்கிறார்கள்.

No comments:

Post a Comment